புதுச்சேரி

புதுச்சேரியில் வரும் ஏப்ரல் 30 வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது.

கொரோனா பரவுவதை தடுக்க நாடு முழுவதும் 21 நாட்கள் பிரதமர் மோடி அறிவித்த ஊரடங்கு அமலில் உள்ளது.

நாளையுடன் அந்த ஊரடங்கு முடியும் நிலையில் பல மாநிலங்கள் ஊரடங்கை நீட்டித்துள்ளது.

தமிழகத்தில் ஊரடங்கை ஏப்ரல் 30 வரை நீட்டித்து உத்தரவிடப்பட்டுள்ளது.

புதுச்சேரியில் இதுவரை 6 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.

புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி அங்கு ஏப்ரல் 30 வரை ஊரடங்கை நீட்டித்து உத்தரவு இட்டுள்ளார்.