சி.ஆர்.பி.எஃப் எனும் மத்திய ஆயுதப்படை காவலர் தேர்வு இந்தி மற்றும் ஆங்கிலத்தில் மட்டுமே நடைபெற்று வந்தது.

இந்த நிலையில் தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு உள்ளிட்ட 13 மாநில மொழிகளில் ஒன்றிய அரசின் ஆயுதப்படை காவலர் தேர்வு நடத்தப்படும் என உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

மாநில மொழிகளில் தேர்வு நடத்த வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியிருந்த நிலையில் அதனை ஏற்றது உள்துறை அமைச்சகம்