விருதுநகர்: விருதுநகர் மாவட்டத்தில் நாளை முதல் பட்டாசு ஆலைகளை மூட பட்டாசு உரிமையாளர்கள் சங்கம் முடிவு செய்துள்ளது.
விருதுநகர் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நேற்றும் மட்டும் விருதுநகரில் 240 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது.
இந்நிலையில் தற்போது வரை 164 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது. ஆகையால் விருதுநகர் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,416 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 548 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனர். 12 பேர் உயிரிழந்து உள்ளனர்.
இந்நிலையில் அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பு காரணமாக, விருதுநகரில் நாளை முதல் பட்டாசு ஆலைகளை மூட பட்டாசு உரிமையாளர்கள் சங்கம் முடிவு செய்துள்ளது. வரும் 19ம் தேதி வரை பட்டாசு ஆலைகள் மூடப்படும் என்று பட்டாசு உற்பத்தியாளர்கள் சங்கம் அறிவித்து இருக்கிறது.