சென்னை: சென்னையில் 2 நாட்கள் தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது. இன்றும், நாளையும் பல்வேறு இடங்களில் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. அதற்கான பட்டியலை மாநகராட்சி வெளியிட்டு உள்ளது.

தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிப்புக்கு தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரமடைந்து வரும் நிலையில், சென்னை மாநகராட்சியில் நாளை மற்றும் நாளை மறுநாள் கோவாக்சின் தடுப்பூசி முகாம் நடைபெறும் என்றும் சென்னை மாநகராட்சி அறிவித்து உள்ளது.

கோவாக்சின் 2-வது டோஸ் தடுப்பூசி செலுத்திக்கொள்ளாதவர்கள் இந்த முகாமில் தடுப்பூசி செலுத்திக்கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.