டெல்லி: வரும் 11ம் தேதி முதல் பணியிடங்களில் கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

ஏப்ரல் 1ம் தேதி முதல் நாடு முழுவதும் அனைத்து மாநிலங்களிலும் 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு 3ம் கட்டமாக கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகின்றது. இந் நிலையில் வரும் 11ம் தேதி முதல் பணியிடங்களிலேயே 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டு உள்ளதாவது: நாடு முழுவதும் உள்ள அனைத்து மாநிலங்களிலும் தனியார் மற்றும் அரசு அலுவலகங்களில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் மையம் அமைத்து ஏப்ரல் 11 முதல் தடுப்பூசி செலுத்தப்படும்.

100க்கும் அதிகமான பயனாளிகளுடன் இயங்கும் அலுவலகங்கள் அருகில் உள்ள தடுப்பூசி மையத்தை அனுக வேண்டும் என்று தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் இதுவரை 8.7 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.