புதுடெல்லி:
நாட்டுக்கு முறையான கொரோனா தடுப்பூசி செயல்திட்டம் தேவை எனக் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாகப் பதிவிட்டுள்ள ராகுல்காந்தி ஒன்றிய பா.ஜ.க. அரசின்,கொரோனா தடுப்பூசி தொடர்பான செயல்திட்டம், பேரழிவை உருவாக்கும் கொரோனா மூன்றாவது அலையை நாட்டில் கொண்டு வந்துவிடும் எனச் சாடியுள்ளார்.

இதுபோன்ற தவறுகளை நடந்துவிடக் கூடாது என்றும், நாட்டுக்குத் தேவை முறையான கொரோனா தடுப்பூசி செயல் திட்டம் எனத் தெரிவித்துள்ளார்.