சென்னை: தமிழ்நாட்டில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வரும் நிலையில்,  மாவட்ட ஆட்சியர்களுக்கு மருத்துவத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் அவசர கடிதம் எழுதி உள்ளார்.

தமிழ்நாட்டில் 50க்கும் கீழே குறைந்து வந்த கொரோனா பாதிப்பு கடந்த இரு நாட்களாக மீண்டும் உயரத்தொடங்கி உள்ளது  ஏப்ரல் 15-ஆம் தேதி நிலவரப்படி 22-ஆக இருந்த பாதிப்பு, தற்போது 96-ஆக பதிவாகி வருகிறது. நாளொன்றுக்கு கிட்டத்தட்ட 100க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அதிபட்சமாக சென்னையில் 44, செங்கல்பட்டில் 46 பேரும் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

இந்த நிலையில்,  எச்சரிக்கையுடன் இருக்குமாறு மாவட்ட ஆட்சியர்களுக்கு மருத்துவத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில், சென்னை, செங்கல்பட்டு மாவட்டங்களில் கொரோனா அதிகரித்துள்ள நிலையில், கவனம் தேவை. கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வருவதால் எச்சரிக்கையுடன் இருக்குமாறு மாவட்ட ஆட்சியர்களுக்கு மருத்துவத்துறை செயலர் எச்சரிக்கை விடுத்துள்ளார். அடுத்த சில வாரங்கள் நோய் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் மிகவும் அவசியம் மற்றும் முக்கியம் . தொடர்ந்து அடுத்தடுத்த நாட்கள் மற்றும் வார இறுதிகளில் பாதிப்புகள் அதிகரிக்க வாய்ப்பு இருப்பதால் எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தியுள்ளார்.