டில்லி

பிரதமர் மோடியின் தாய் ஹுரா பென் கொரோனா நிவாரண நிதிக்கு ரூ.25000 நன்கொடை வழங்கி உள்ளார்.

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று வேகமாகப் பரவி வருகிறது.

இதைத் தடுக்க அரசு பல நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன.

இந்த பணிகளுக்கு பொது நிவாரண நிதி ஒன்றைப் பிரதமர் மோடி தொடங்கி உள்ளார்.

அதற்கு நன்கொடை வழங்குமாறு பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

பல அரசியல், கலை உலகம் மற்றும் வர்த்தகப் பிரமுகர்கள் இந்த நிதிக்கு நன்கொடை அளித்து வருகின்றனர்.

பிரதமர் மோடியின் தாய் இன்று ரூ.25000 நன்கொடை வழங்கி உள்ளார்.

இந்த தொகையை அவர் தனது சொந்த சேமிப்பில்  இருந்து வழங்கி உள்ளார்.