ஐதராபாத்:

ந்திரா, தெலுங்கானா மாநிலங்களில் கொரோனா தொற்று பரவல் கட்டுக்குள் இருந்து வந்த நிலையில், கடந்த இரண்டு நாட்களாக அங்கு கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை திடீரென அதிகரித்து வருகிறது.

இந்த இரண்டு மாநிலங்களைச் சேர்ந்தா பலர் டெல்லி தப்லிக் ஜமாத் மாநாட்டில் பங்கேற்றதும், அவர்களில் பலருக்கு கொரோனா தொற்று இருப்பதும் உறுதியாகி உள்ளது.

ஆந்திராவில் கடந்த 24 மணி நேரத்தில் 67 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது. இதனால் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 132  ஆக உயர்ந்துள்ளது.

அதுபோல,  தெலங்கானாவில் நேற்று ஒரே நாளில் 30 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. பாதிக்கப்பட்ட 3 பேர் உயிரிழந்தனர். தெலங்கானா மாநிலத்தில் தற்போது 127 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

தமிழக எல்லையில் உள்ள சித்தூர் மாவட்டத்தில் 8 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

இன்று (ஏப்.2) காலை திருப்பதி தியாகராஜ நகர் பகுதியில் வசிக்கும் ‘கூரியர் பாய்’ ஒருவருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

திருப்பதி நகரில் முதன்முறையாக கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதால் இப்பகுதி மக்கள் பீதியடைந்துள்ளனர்.

ஸ்ரீகாளஹஸ்தி நகரில் ஏற்கெனவே டெல்லி சென்று வந்த ஒருவருக்கு கரோனா இருப்பது தெரியவந்த நிலையில், இன்று காலை மேலும் ஒருவர் இந்தத் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதுவரை தெலங்கானாவில் மொத்தம் 9 பேர் கரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.