சென்னை:

மிழகத்தில் இன்று புதிதாக 98 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளதாகவும், இதனால் மொத்த எண்ணிக்கை 1173 ஆக உயர்ந்து இருப்பதாகவும் தமிழக சுகாதாரத் துறைச் செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார்.

இன்று மாலை செய்தியாளர்களிடம் பேசிய சுகாதாரத்துறைச் செயலாளர்,

தமிழகத்தில் வீட்டுக் கண்காணிப்பில் உள்ளவர்களின் எண்ணிக்கை 33,850. 136 பேர்

28 நாள்கள் கண்காணிப்பு முடித்தவர்கள் 63,380.

இதுவரை 12,746 பேருக்கு கரோனா தொற்று பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

இவர்களில், நேற்று வரை 1,075 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது

இன்றைக்கு புதிதாக 98 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்த 98 பேரில் 91 பேருக்கு நேரடியாக பாதிப்பு உருவாகியுள்ளது. மீதமுள்ள 7 பேர் பாதிப்புடையவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள்.

கொரோனா பரிசோதனைக்காக  தமிழகத்தில் 25 அரசு ஆய்வகங்கள் உடன்  9 தனியார் ஆய்வகங்கள் உருவாக்கப்பட்டு இருப்பதாகவும் தெரிவித்தது.

இன்றைய மாலை நிலவரப்படும் தமிழகத்தில் கொரோனா பாதிப்புக்குள்ளானவர்கள் எண்ணிக்கை  1,173 ஆகவும், பலி எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளது.

அதே வேளையில் கொரோனா பாதிப்பில் இருந்து  குணமடைந்தோர்: 58 பேர் என்றும் தெரிவித்தவர், கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் இன்றைய நிலவரப்படி யாரும் வென்டிலேட்டரில் வைக்கப்படவில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.