சென்னை: கொரோனாவால் உயிரிழந்தோருக்கு அரசு வழங்கும் நிவாரண தொகை பெற, அவர்களது குடும்பத்தினர் விண்ணப்பிக்கலாம் என தமிழகஅரசு அறிவித்து உள்ளது.

இதுதொடர்பாக தமிழகஅரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில்,  கொரோனவால் உயிரிழந்தவா்களின் வாரிசுதாரா்கள் அரசின் இழப்பீடு உதவித்தொகை பெற விண்னப்பிக்கலாம்.  கொரோனா தொற்றால் உயிரிழந்தோரின் வாரிசுதாரர்கள்  அல்லது அவரது குடும்பத்தினர், அரசு வழங்கும் ரூ.50,000 நிதியுதவி பெற  www.tn.gov.in என்ற இணைய முகவரியில் விண்ணப்பித்து நிவாரண தொகையை பெறலாம் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதனிடையே, தமிழ்நாடு அரசின் சாா்பில் கொரோனா பெருந்தொற்றினால் உயிரிழந்தவா்களின் வாரிசுதாரா்களுக்கு ரூ.50,000 நிதியுதவி வழங்க அரசாணை வெளியிடப்பட்டது. அதன்படி, கொரோனவால் உயிரிழந்தவா்களின் வாரிசுதாரா்கள் அரசின் இழப்பீட்டு உதவித்தொகை பெறுவதை எளிமையாக்கும் வகையில் தமிழ்நாடு அரசு இணையதள முகவரியில் விண்ணப்பித்து உதவித்தொகையை பெறலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.