புதுடெல்லி:
ந்தியாவில் கொரோனா பாதிப்பு 27 ஆயிரத்தைத் தாண்டியுள்ளதாக மத்திய சுகாதார துறை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து மத்திய சுகாதார துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 27,553 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது தெரிய வந்துள்ளது என்றும், இதில் 284 உயிரிழந்து உள்ளனர் என்றும், தொற்றில் இருந்து 9,249 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அந்த அறிக்கையில், இந்தியாவில் ஒமிக்ரான் பாதிப்பு எண்ணிக்கை 1,525 ஆக உயர்வு அடைந்து உள்ளதாகவும், அதிகபட்சமாக மஹராஷ்டிராவில் 460 பேருக்கும், டெல்லியில் 351 பேருக்கும், குஜராத்தில் 136 பேருக்கும் ஒமிக்ரான் பாதிப்பு உறுதி ஏற்பட்டு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் ஒமிக்ரான் பாதிப்பு எண்ணிக்கை 117-ஆக அதிகரித்து உள்ளது என்பது குறிப்பிடத்தகது.