புதுடெல்லி: 
கொரோனா பரவல் அதிகரிப்பு குறித்து  சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகேலிடம் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஆலோசனை நடத்தியுள்ளார்.
இதுகுறித்து வெளியான தகவலின் படி, இந்த ஆலோசனையின் போது, இருவரும்  கொரோனா  மூன்றாவது அலை மற்றும் அதன் மாறுபாடு ஒமைக்ரான் சாத்தியம் குறித்து விரிவான விவாதத்தை நடத்தியுள்ளதாகத் தெரிய வந்துள்ளது.
மேலும் இந்த ஆலோசனையின் போது,  சத்தீஸ்கர் மாநிலம் இதுபோன்ற எந்தச் சூழலையும் எதிர்கொள்ளத் தயாராக இருப்பதாகக் காங்கிரஸ் இடைக்காலத் தலைவரிடம் முதல்வர் முதல்வர் பூபேஷ் பாகேல்  உறுதியாகத் தெரிவித்துள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.