ஃபிரோசாபாத்,:
லித் பெண்ணுக்கு ஸ்மார்ட் போனை உள்ளிட்ட பரிசுகளை காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி அனுப்பி வைத்துள்ளார்.

கடந்த வாரம் உத்தரபிரதேச மாநிலம் ஃபிரோசாபாத் மாவட்டத்திற்கு சென்ற பிரியங்கா காந்தி, அங்கு தலித் வளையல் தயாரிப்பாளர் சிதாரா ஜாதவ்வை சந்தித்து பேசினார். அப்போது அந்த பெண்மணி, பிரியங்காவிடம் தனது கஷ்டங்களைப் பகிர்ந்து கொண்டார். அதை கேட்டு கொண்ட பிரியங்கா சித்தாராவின் வீட்டில் தேநீர் அருந்தி விட்டு சென்றார்.

இந்நிலையில், தலித் பெண்ணுக்கு ஸ்மார்ட் போனை உள்ளிட்ட பரிசுகளை காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி அனுப்பி வைத்துள்ளார்.

இந்த பரிசுகளை காங்கிரஸ் மாவட்டத் தலைவர் சந்தீப் திவாரி நேற்று சித்தாராவின் வீட்டிற்குச் வழங்கினார்.

பிரியங்கா அனுப்பிய பரிசுகளில் ஒரு ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன், அவரது மூன்று மகள்களுக்கான ஆடைகள், ஒரு கம்பளி போர்வை, பிரஷர் குக்கர் மற்றும் வேறு சில பாத்திரங்கள் ஆகியவை இடம் பெற்று இருந்தது.

பரிசுகளைப் பெற்ற மகிழ்ச்சியில் பேசிய அந்த தலித் பெண்மணி, எந்த ஒரு அரசியல் தலைவரும் தனக்கு பரிசுகளை அனுப்புவார்கள் என்று எதிர்பார்க்கவில்லை என்று கூறினார்.