மும்பை:
கோபா அமெரிக்கா கால்பந்தில் வெற்றிபெற்ற மெஸ்ஸி தலைமையிலான அர்ஜென்டினா அணிக்கு இந்திய கிரிக்கெட் நட்சத்திரம் சச்சின் டெண்டுல்கர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

47-வது கோபா அமெரிக்கா கால்பந்து போட்டி பிரேசில் நாட்டில் ரசிகர்கள் இன்றி நடைபெற்றது. அதில் இறுதிச் சுற்றில் அர்ஜென்டினாவும், பிரேசிலும் மோதின.

விறுவிறுப்பாக நடைபெற்ற முதல் பாதியின் 27-வது நிமிடத்தில், அர்ஜென்டினாவின் ஏஞ்சல் டி மரியா ஒரு கோல் அடித்து தனது அணிக்கு முன்னிலை பெற்றுத் தந்தார். இதனால் முதல் பாதியில் அர்ஜென்டினா 1-0 என முன்னிலை பெற்றது.

இரண்டாவது பாதியில் எந்த அணியும் கோல் அடிக்கவில்லை. இதன்மூலம் 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்ற அர்ஜென்டினா அணி கோப்பையைக் கைப்பற்றி அசத்தியது. கோபா அமெரிக்கா கோப்பையை ஆர்ஜென்டீனா வெல்வது இது 15-வது முறையாகும்.

இந்நிலையில், கோபா அமெரிக்கா கால்பந்தில் வெற்றிபெற்ற மெஸ்ஸி தலைமையிலான அர்ஜென்டினா அணிக்கு இந்திய கிரிக்கெட் நட்சத்திரம் சச்சின் டெண்டுல்கர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.