குன்னூர்

நேற்று நடந்த ஹெலிகாப்டர் விபத்து குறித்த விசாரணை தொடங்கி உள்ளது.

நேற்று வெலிங்டன் ராணுவ கல்லூரியில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் முப்படை தளபதி, அவர் மனைவி மற்றும் 12 ராணுவ அதிகாரிகள் பயணம் செய்த போது விபத்து ஏற்பட்டது.   இதில் பிபின் ராவத், அவர் மனைவி, மற்றும் 11 ராணுவ அதிகாரிகள் உயிர் இழந்தனர்.   குழுத்தலைவர் வருண் ஆபத்தான நிலையில் சிகிச்சையில் உள்ளார்.   அவரைக் காப்பாற்றும் முயற்சிகள் தீவிரமாக நடந்து கொண்டு உள்ளன.

இது குறித்து விசாரணை தொடங்கி உள்ளது.   இந்த விசாரணைக் குழுவில் 20க்கும் மேலானோர் இடம் பெற்றுள்ளனர்.   அவர்கள் டிரோன் காமிரா மற்றும் கருவிகள் உதவியுடன் ஹெலிகாப்டர் எவ்வளவு உயரத்தில் இருந்து விபத்துக்குள்ளானது என்பது குறித்து விசாரணை செய்து வருகின்றனர்.  இந்த நிகழ்வைப் பார்த்த மக்களிடமும் விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்த விபத்து நேரத்தில் அருகில் ரயில்வே தண்டவாளத்தில் இருந்து ஒரு சுற்றுலாப்பயணி வீடியோ எடுத்துள்ளார்.  அந்த சுற்றுலாப்பயணிகளிடம் இருந்து கூடுதல் தகவல்களையா பெற விசாரணைக் குழுவினர் திட்டம் இட்டுள்ளனர்.  இந்த சுற்றுலாப் பயணிகள் குறித்தும் விசாரணை நடைபெறுகிறது.