டெல்லி: சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்ததாக பாஜகவைச் சேர்ந்த  நுபுர் ஷர்மா, ஜின்டால் மற்றும்  அசாதுதீன் ஓவைசி எம்.பி. மீது டெல்லி காவல்துறை வழக்கு பதிவு செய்துள்ளது.

நபிகள் நாயகம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்த நூபுல் சர்மா, டெல்லி பாஜக ஊடகப் பிரிவுத் தலைவர் நவீன் குமார் ஜிண்டால் ஆகியோரை  பாஜக தலைமை கட்சியில் இருந்து நீக்கி நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்கிடையில், நூபுல் சர்மா மீது மராட்டியத்தில் வழக்கு பதிவு செய்துள்ளது.

இந்தநிலையில் தற்போது டெல்லி காவல்துறையும் வழக்கு பதிவு செய்துள்ளது. நபிகள் நாயகம் குறித்து அவதூறுகருத்து தெரிவித்த நுபுர்சர்மா, நவீன் ஜிண்டால் மீது டெல்லி போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

அதுபோல, சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்த புகாரில்  ஏஐஎம்ஐஎம் கட்சித் தலைவர் அசாதுதீன் ஓவைசி மீது டெல்லி காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது.

இதற்கிடையில், இறைதூதர் குறித்து சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்ததற்காக இந்தியாவின் பல்வேறு நகரங்கள்மீது தற்கொலைப்படை தாக்குதல் நடத்துவோம் என்று அல்-கொய்தா பயங்கரவாத அமைப்பு மிரட்டல் விடுத்துள்ளது.