பெங்களூரூ:
மைச்சர் பதவியை ராஜினாமா செய்வதாக ஈஸ்வரப்பா அறிவித்துள்ளார்.

கர்நாடகத்தின் பெலகாவி மாவட்டம் இண்டல்கா பகுதியைச் சேர்ந்த அரசு பணிகள் காண்டிராக்டரான சந்தோஷ் கே.பாட்டீல் உடுப்பியில் உள்ள ஒரு ஓட்டலில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

வளர்ச்சி பணிகளை செய்த ஒப்பந்த தொகையில் அமைச்சர் ஈஸ்வரப்பா
40 சதவீதம் கமிஷன் கேட்பதாக சந்தோஷ் பகிரங்கமாக குற்றம் சாட்டியிருந்தார்.

தனது தற்கொலைக்கு அமைச்சர் ஈஸ்வரப்பாதான் காரணம் என்று அவர் கடிதம் எழுதி வைத்திருந்தார். இதையடுத்து, ஈஸ்வரப்பாவை உடனே பதவி நீக்கம் செய்ய வேண்டும், அவரை கைது செய்து போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் போராட்டத்தில் குதித்தன.

காண்டிராக்டர் சந்தோஷ் தற்கொலை தொடர்பாக கர்நாடக அமைச்சர் ஈஸ்வரப்பா மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

இந்த நிலையில், தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்வதாக ஈஸ்வரப்பா அறிவித்துள்ளார். முதல் அமைச்சர் பசவராஜ் பொம்மையை இன்று சந்தித்து ராஜினாமா கடிதத்தை அளிக்க இருப்பதாகவும் தனக்கு ஒத்துழைப்பு அளித்த அனைவருக்கு நன்றி தெரிவிப்பதாகவும் ஈஸ்வரப்பா தெரிவித்திருக்கிறார்.