சென்னை: சென்னை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில்  இரவு முதல் தொடர்ந்து மழை பெய்து வருவதால், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில்  உள்ள அனைத்து பள்ளிகளுக்கு மட்டும் இன்று அரை நாள் விடுமுறை அறிவித்து  கனமழை தொடர்வதால் மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். மேலும், வேலூரில் அனைத்து பள்ளிகளிலும் மாலை 3 மணிக்கு வகுப்புகளை முடித்துக் கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

 

தொடர் மழை பெய்து வருவதால், சென்னையில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் அரைநாள் விடுமுறை விடப்படுவதாக மாவட்ட ஆட்சியர் அமிர்த் ஜோதி அறிவித்து உள்ளார்.

அதுபோல  கனமழை காரணமாக செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு மதியத்திற்கு பின் அரைநாள் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் ராகுல் நாத் அறிவித்திருந்தார்.

அதனை தொடர்ந்து தற்போது, காஞ்சிபுரம் மாவட்டத்திலும் தொடர் மழை பெய்து வருவதால், பள்ளிகளுக்கு மட்டும் அரைநாள் விடுமுறை என காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி அறிவித்துள்ளார்.