டில்லி

ந்திரயான் 3 விவகாரத்தில் விஞ்ஞானிகளின் சாதனையில் பிரதமர் மோடி புகழ் தேடுவதாகக் காங்கிரஸ் கட்சி கூறி உள்ளது

இஸ்ரோ அனுப்பிய சந்திரயான் 3 இன் லேண்டர் வெற்றிகரமாக நிலவில் தரை இறங்கியது.  இந்த வரலாற்றுச் சாதனைக்காக இந்தியா மற்றும் வெளிநாடுகளில் இருந்து இஸ்ரோ விஞ்ஞானிகளுக்குப் பலரும் புகழாரம் சூட்டி வருகின்றனர்.  இந்த வெற்றிக்கு காங்கிரஸ் தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி உள்ளிட்ட பலரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் காங்கிரஸ் பொதுச் செயலர் வேணுகோபால் தமது சமுக வலைத் தளத்தில்

”நம்முடன் சந்திரயான்-3, நிலவில் தரையிறங்கிய பெருமையும், உற்சாகமும் இன்னும் நீண்ட காலத்துக்கு இருக்கும்.

உண்மையிலேயே இஸ்ரோ தலைவர் சோம்நாத்தின் தலைமை, வரலாறு படைத்து விட்டது. நாம் அவருக்கும், அவருடைய குழுவுக்கும் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

போலி வேடம் போடும் பிரதமர் மோடி, சில கேள்விகளுக்குப் பதில் அளிக்க வேண்டும். நீங்கள் லேண்டர் தரையிறங்கியவுடன் அவசரமாகத் திரையில் தோன்றி அந்த பெருமையைத் தட்டிச் சென்றீர்கள்.

உங்கள் அரசு இஸ்ரோவுக்கும், விஞ்ஞானிகளுக்கும் ஆதரவாக இருக்க மறுப்பது ஏன்?  இந்த சந்திரயான்-3 திட்டத்தில் பணியாற்றிய ஹெவி என்ஜினீயரிங் கார்ப்பரேசன் பொறியாளர்களுக்கு 17 மாதங்களாகச் சம்பளம் வழங்காதது ஏன்?

இவை போலப் பல முக்கியமான திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீட்டை 32 சதவீதம் குறைத்தது ஏன்?  

அவர்கள்  உலகத்தரம் வாய்ந்த விண்வெளி ஆராய்ச்சி திட்டங்களை நடத்தி வந்த போதிலும், அவர்களின் திறமை மற்றும் கடின உழைப்பை நீங்கள் மதிக்கவில்லை.

ஆனால் வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல், விஞ்ஞானிகளின் சாதனையில் நீங்கள் புகழ் தேடுகிறீர்கள்.

என்று பதிவிட்டுள்ளார்.