புதுடெல்லி:
22 ஆண்டுக்கு பின்.. இன்று காங்கிரஸ் தலைவர் தேர்தல் நடைபெற உள்ளது.

2019 நாடாளுமன்ற தேர்தலை காங்கிரஸ் கட்சி ராகுல் காந்தி தலைமையில் சந்தித்தது. இதில் காங்கிரஸ் படுதோல்வியடைந்தது. இதையடுத்து ராகுல் காந்தி தலைவர் பதவியை ராஜினாமா செய்தார். அதன்பிறகு காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவராக சோனியா காந்தி செயப்பட்டு வருகிறார்.

இருப்பினும் அவரது தலைமையில் காங்கிரஸ் கட்சி வளர்ச்சியடையவில்லை. பஞ்சாப் மாநிலத்தில் ஆட்சியை இழந்த காங்கிரஸ், மேற்குவங்கம், உத்தர பிரதேசம், மணிப்பூர், கோவா, மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களிலும் ஆட்சியை பிடிக்கவில்லை.

இந்நிலையில் தான் காங்கிரஸ் கட்சிக்கு புதிய தலைவரை தேர்வு செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகள் தொடர்ந்து எழுந்து வந்தனர். மேலும் மூத்த தலைவர்கள் 23 பேர் அதிருப்தி அணியாக மாறி ஜி23 குழுவாக செயல்பட்டனர். ஒவ்வொரு மாநில தேர்தலின்போதும் கூட காங்கிரஸ் கட்சிக்கு நிரந்தர தலைவர் வேண்டும் என அவர்கள் கூறி வந்தனர். இதன் தொடர்ச்சியாக தான் கடந்த மாதம் காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவிக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டது. அதன்படி நாளை காங்கிரஸ் கட்சியின் தலைவரை தேர்வு செய்வதற்கான தேர்தல் நடைபெற உள்ளது.

இந்நிலையில் இன்று காங்கிரஸ் தலைவர் தேர்தல் நடைபெற உள்ளது. ஆனால் ராகுல் காந்தி டெல்லி செல்ல மறுத்துள்ளார். பாரத் ஜோடோ யாத்திரை நடைபெறும் நிலையில் தான் அவர் டெல்லி செல்ல மறுத்துள்ளார். மாறாக அவர் நாளை கர்நாடகாவிலேயே ஓட்டளிக்க உள்ளார். கர்நாடகாவில் பாரத் ஜோடோ யாத்திரை சென்று வரும் ராகுல் காந்தி அங்கு அமைக்கப்பட்டுள்ள பூத்தில் வாக்களிக்க உள்ளார். இதற்காக சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

காங்கிரஸ் தலைவர் பதவிக்கு 2 பேர் போட்டியிடும் நிலையில் 22 ஆண்டுகளுக்கு பிறகு நாளை தேர்தல் நடைபெற உள்ளது. காங்கிரஸ் பொதுக்குழு உறுப்பினர்கள், எம்பி, எம்எல்ஏக்கள், மாவட்ட தலைவர்கள், மாநில முன்னாள் தலைவர்கள் உள்ளிட்டவர்கள் வாக்களித்து புதிய தலைவரை தேர்வு செய்ய உள்ளனர். இதற்காக கியூஆர் கோடுடன் கூடிய வாக்காளர் அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது. நாளைய தேர்தலுக்காக வாக்கு சீட்டுகள் உரிய பாதுகாப்புடன் அனைத்து இடங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. நாளை தேர்தலில் பதிவாகும் ஓட்டுகள் வரும் 19ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.