டில்லி

காங்கிரஸ் கட்சி நேரு நினைவு அருங்காட்சியகம் மற்றும் நூலகத்தின் பெயர் மாற்றப் பட்டதற்குக் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

கடந்த 1964 ஆம் ஆண்டு டில்லி தீன் மூர்த்தி வளாகத்தில் உள்ள நேரு நினைவு அருங்காட்சியகம் மற்றும் நூலகம் நாட்டின் முதல் பிரதமர் நேருவின் மறைவுக்குப் பின்னர் நிறுவப்பட்டது. இந்த அருங்காட்சியகம் தன்னாட்சி அமைப்பாக நிறுவப்பட்டுள்ளது/. இது நவீன இந்தியாவின் மேம்பட்ட மேம்பட்ட ஆராய்ச்சியை வளர்ப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் நடைபெற்ற சிறப்புக் கூட்டத்தில் நேரு நினைவு அருங்காட்சியகத்தின் பெயரை மாற்ற முடிவு செய்யப்பட்டது.  நேரு நினைவு அருங்காட்சியகத்தின் பெயர் பிரதமர் அருங்காட்சியகம் என அதிகாரப்பூர்வமாகப் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

நேரு நினைவு அருங்காட்சியகத்தின் பெயர் மாற்றம் செய்யப்பட்டதற்குக் காங்கிரஸ் கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இந்த நடவடிக்கை மோடி அரசின் அற்புதமான பழிவாங்கும் செயல் எனக் காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியுள்ளது.