புதுச்சேரி மாநிலத்தின் காமராஜ் நகர் தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் ஜான்குமார் முன்னிலை வகித்து வருகிறார்.

புதுவை மாநிலத்தில் காமராஜ் நகர் தொகுதிக்கு கடந்த 21ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது. வழக்கமான அளவில் வாக்குகள் பதிவான நிலையில், இன்று காலை முதல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. தபால் வாக்குகள் எண்ணிக்கையில் காங்கிரஸ் வேட்பாளர் ஜான்குமார் முன்னிலை வகித்து வந்த நிலையில், வாக்கு இயந்திரங்களில் பதிவான வாக்குகளிலும் தொடர்ந்து அவர் முன்னிலை வகித்து வருகிறார்.

என்.ஆர் காங்கிரஸ் – காங்கிரஸ் இடையே கடும் போட்டி நிலவும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தொடர்ந்து காங்கிரஸ் முன்னிலை வகித்து வருவதால் அக்கட்சியின் தொண்டர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.