டெல்லி: முன்னாள் பிரதமர் இந்திராகாந்தியின் பிறந்தநாளையொட்டி டெல்லியில் உள்ள அவரது நினைவிடத் தில் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், வயநாடு எம்.பி.யுமான ராகுல்காந்தி மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

இந்தியாவின் முதல் பிரதமரான ஜவகர்லால் நேருவின் ஒரே மகளான இந்திராகாந்தி, சுதந்திரஇந்தியாவின் மூன்றாவது பிரதமராக பதவி வகித்தவர்.  இந்தியாவின் இரும்பு பெண்மணி என அழைக்கப்படும்,  இந்திராகாந்தியின் ஆளுமை உலக நாடுகளையே வியக்க வைத்தது. வலுவான அதிகார பலத்துடன் மிகவுயர்ந்த பதவியிலிருந்து நாட்டை வழி நடத்தியவர்.

இன்று இந்திராகாந்தியின் பிறந்தநாளையொட்டி அவருக்கு மரியாதை செய்யும் விதமாக காங்கிரஸ் கட்சியினர் அவரது சிலைகளுக்கும், உருவப்படத்துக்கும் மாலை அணிவித்து மரியாதை செய்து வருகின்றனர்.

டெல்லி சக்தி ஸ்தலத்தில் உள்ள அவரது நினைவிடத்தில், இந்திராகாந்தியின் பேரனான  ராகுல்காந்தி உள்படகாங்கிரஸ் மூத்த தலைவர்கள் மலர்தூவி மரியாதை செய்தனர்.