கொல்கத்தா

மேற்கு வங்க கிரிக்கெட் அணித் தலைவர் அபிமன்யூ ஈஸ்வரனுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவில் கொரோனா பாதிப்பு குறையாமல் இருந்து வருகிறது.   இதுவரை 89.6 லட்சத்துக்கு மேல் பாதிப்பு அடைந்துள்ளனர்.  இந்த தொற்று பல பிரபலங்களையும் விட்டு வைக்கவில்லை.  அவ்வகையில் மேற்கு வங்க கிரிக்கெட் அணித் தலைவர் அபிமன்யூ ஈஸ்வரனுக்கு கொரொனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

எனவே அடுத்த 2 வாரங்களுக்கு அபிமன்யூ ஈஸ்வரன் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.  வரும் 24 ஆம் தேதி அன்று மேற்கு வங்க கிரிக்கெட் சங்கத்தின் பெங்கால் டி 20 போட்டிகள் தொடர்கின்றன.    கொரோனா தொற்றால் இந்த போட்டியில் அபுமன்யூ ஈஸ்வரன் பங்கேற்பது சந்தேகமாகி உள்ளது.

மேற்கு வங்க கிரிக்கெட் சங்க இணைச்செயலர் தேபபிரதா தாஸ், “அபிமன்யூ  ஈஸ்வரனுக்கு நடந்த கொரோனா பரிசோதனையில் தொற்று பாதிப்பு உறுதியாகி உள்ளது.   அவருக்கு அறிகுறிகள் ஏதும் இல்ல்சி,  இப்போது தனிமையில் உள்ள அவர் மேற்கு வங்க கிரிக்கெட் சங்க மருத்துவக் குழுவிடம் சிகிச்சை பெற்று வருகிறார். ” எனத் தெரிவித்துள்ளார்.