போபால்: பாஜக ஆட்சி செய்து வரும், மத்தியபிரதேச மாநிலத்தில், சட்டமன்ற  காங்கிரஸ் கட்சி தலைவராக முன்னாள் முதல்வர் கமல்நாத் இருந்து வருகிறார். இவர் தனது எதிர்க்கட்சி தலைவர் பதவியை ராஜினாமா செய்து அறிவித்துள்ளார்.

மத்தியப் பிரதேசம் மாநிலத்தில் பாஜக ஆட்சி நடந்து வருகிறது. முதலமைச்சராக சிவராஜ் சிங் சவுகான் உள்ளார். அம்மாநிலத்தில் எதிர்க்கட்சியாக காங்கிரஸ் உள்ளது. சட்டப்பேரவை காங்கிரஸ் கட்சித் தலைவராக முன்னாள் முதல்வர் கமல்நாத் பதவி வகித்து வந்தார்.

இந்த நிலையில், கமல்நாத் காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற தலைவர் பதவியான எதிர்க்கட்சி தலைவர்  இன்று (ஏப்.28) ராஜினாமா செய்து, அதற்கான கடிதத்தை  காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்திக்கு அனுப்பி வைத்துள்ளார். இதை சோனியா காந்தி ஏற்றுக்கொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

‘ஒரு நபருக்கு, ஒரு பதவி’ என்ற கட்சியின் கொள்கைபடி, மாநில காங்கிரஸ் கட்சி தலைவராகவும் கமல் இருப்பதால், மாநில எதிர்க்கட்சி தலைவர் பதவியை ராஜினாமா செய்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, சட்டப்பேரவை புதிய காங்கிரஸ் கட்சித் தலைவராக பிகிந்த மாவட்டத்தில் உள்ள லஹார் தொகுதி எம்எல்ஏ  கோவிந்த் சிங்கை சோனியா காந்தி நியமித்துள்ளார்.