டெல்லி: காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி இன்று குடியரசு தலைவர் திரவுபதி முர்முவை சந்தித்து பேசினார்.

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு தனிமைப்படுத்திக்கொண்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், அவர் முழுமையாக தொற்றில் இருந்து குணமடைந்தார். இதையடுத்து,   டெல்லியில் உள்ள ராஷ்டிரபதி பவனில் ஜனாதிபதி திரௌபதி முர்முவை சந்தித்து பேசினார்.  இந்த சந்திப்பின் போது இரு தலைவர்களும் பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசனை செய்து இருக்கலாம் என்று தெரிகிறது.

இதுதொடர்பாக ஜனாதிபதி மாளிகை வெளியிட்டுள்ள டுவிட் பதிவில், இருவரும் சந்தித்து பேசுவது தொடர்பான புகைப்படங்களை பதிவிடப்பட்டு உள்ளது.