புதுடெல்லி: 
கொரோனா  பாதிப்பால்  மறைந்த லதா மங்கேஷ்கர்  மறைவுக்கு  காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி இரங்கல் தெரிவித்துள்ளார்.

இந்தி, தமிழ் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் பாடிய இசைக்குயில் லதா மங்கேஷ்கர் ( இன்று பிப்-6 ) காலாமானார். கோவிட் பாதிப்பில் இருந்து அவரது உயிர் மும்பை மருத்துவமனையில் பிரிந்தது. அவருக்கு வயது 92. பாரத ரத்னா உள்ளிட்ட பல்வேறு உயரிய விருதுகளை லதா மங்கேஷ்கர் பெற்றுள்ளார். இவருக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், கொரோனா  பாதிப்பால்  மறைந்த லதா மங்கேஷ்கர்  மறைவுக்கு  காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி இரங்கல் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இன்று ஒரு சகாப்தம் முடிந்துவிட்டது. லதா ஜி எப்போதும் தலைமுறைகளுக்கு ஒரு உத்வேகமாக இருப்பார் என்று குறிப்பிட்டுள்ளார்.