டில்லி

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை மணிப்பூரில் தடுத்து நிறுத்தியதற்கு அக்கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.

ணிப்பூர் மாநிலத்தில் மைதேயி சமூகத்தினர் மற்றும் குகி பழங்குடியினர் இடையே கடந்த மாதம் 3-ந்தேதி முதல் வன்முறை நீடித்து வருகிறது. சுமார் 100-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த இந்த வன்முறைக்கு பா.ஜ.க.வின் பிளவுபடுத்தும் அரசியலே காரணம் என்பது காங்கிரசின் விமர்சனமாகும்.

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மணிப்பூரில் வன்முறையால் பாதிக்கப்பட்ட மக்களைச் சந்தித்து ஆறுதல் கூறுவதற்காக இன்று சென்றார். ஆனால் அவர் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளார். காவல்துறை  ராகுல்காந்தி வருகையால் வன்முறை ஏற்படலாம் என்பதால் முன்னெச்சரிக்கையாகத் தடுத்து நிறுத்தப்பட்டதாகத் தெரிவித்துள்ளது.

காவல்துறை தடுத்து நிறுத்தியதை அடுத்து ராகுல்காந்தி இம்பால் திரும்பினார்.  மணிப்பூரில் பாதிக்கப்பட்ட மக்களைச் சந்திக்க சென்ற ராகுல் காந்தியைத் தடுத்து நிறுத்தியது வருந்தத்தக்கது என காங்கிரஸ் கட்சி கூறியுள்ளது.

காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ்,

பிரதமர் மோடி மணிப்பூர் விவகாரத்தில் அமைதியாக இருப்பதால், ராகுல் காந்தி மக்களைச் சந்திக்கச் செல்வதைத் தடுத்து நிறுத்துவதா?.  தனது ஒற்றுமை நடைப்பயணத்தின் தொடர்ச்சியாகவே 2 நாள் பயணமாக ராகுல் மணிப்பூர் சென்றார். அவரைத் தடுத்து நிறுத்தியது வருந்தத்தக்கது”

என்று கூறி உள்ளார்..

அக்கட்சியின் மற்றொரு பொதுச் செயலர் கே சி வேணுகோபால்,

“மணிப்பூர் சென்ற ராகுல் காந்தியை அப்பகுதி மக்கள் இருபுறமும் நின்று கைகளை அசைத்து வரவேற்றனர். மக்கள் வரவேற்கும் போது ராகுல்காந்தியை ஏன் தடுத்தனர் என்பதைப் புரிந்து கொள்ள முடியவில்லை”

எனக் கூறியுள்ளார்.