டில்லி

காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே இன்று ஆஸ்திரேலியா மற்றும் ஜெர்மன் தூதர்களை சந்தித்துள்ளார்.

இன்று காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, ஜெர்மனி தூதர் பிலிப் ஆக்கர்மேன் மற்றும் ஆஸ்திரேலிய தூதர் பேர்ரி ஓ பேரல் ஆகியோரை தனது இல்லத்தில் சந்தித்துப் பேசினார்.

கார்கே டிவிட்டரில் இது குறித்து,

“ஜெர்மனி தூதர் பிலிப் ஆக்கர்மேன் உடனான சந்திப்பில், பொதுவான ஜனநாயக கொள்கைகள் அடிப்படையில் உருவான மற்றும் நம்பிக்கை மற்றும் பரஸ்பர மரியாதை ஆகியவற்றால் குறிக்கப்பட்ட இந்தியா மற்றும் ஜெர்மனி ஆகிய இரு நாடுகள் இடையேயான செயல்திட்ட உறவுகளை ஆழப்படுத்துவதற்கான வழிகள் பற்றி ஆலோசனை நடத்தப்பட்டது”

எனத் தெரிவித்து உள்ளார்.

ஜெர்மனி ஐரோப்பிய யூனியனில் இந்தியாவின் மிகப் பெரிய வர்த்தக நாடாக உள்ளது. அந்நாடு இந்தியாவுக்கான அந்நிய நேரடி முதலீட்டுக்கான பெரிய வளம் கொண்ட நாடாக உள்ளது.

இன்று கார்கேவை அவரது இல்லத்தில் ஆஸ்திரேலியா தூதர் பேர்ரி ஓ பேரல் சந்தித்துப் பேசினார். சந்திப்பின் போது இரு நாடுகள் இடையேயான உறவுகளை ஆழப்படுத்துவதற்கான வழிகள் பற்றி ஆலோசிக்கப்பட்டன என்று கார்கே டிவிட்டரில் தெரிவித்து உள்ளார்.