புதுடெல்லி:
காங்கிரஸ் தலைவர்கள் கைது செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக குடியரசுத் தலைவரிடம் காங்கிரஸ் இன்று மனு அளிக்க உள்ளது.

நேஷனல் ஹெரால்டு பத்திரிகை தொடர்பான அமலாக்கத்துறை விசாரணைக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி ஆஜராவதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்திய காங்கிரஸ் தலைவர்களை காவல்துறையின் கட்சி அலுவலகத்திற்குள் புகுந்து கைது செய்தனர்.

இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்க கோரி, டெல்லையில் இன்று குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்தை சந்தித்து காங்கிரஸ் தலைவர்கள் மனு அளிக்க உள்ளனர்.