சென்னை:
க்னிபாத் திட்டம் நாட்டின் பாதுகாப்பை கேள்விக்குள்ளாக்கும் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் விமர்சனம் செய்துள்ளார்.

மத்திய பாதுகாப்பு துறை மந்திரி ராஜ்நாத் சிங் கடந்த செவ்வாய்க்கிழமை ‘அக்னிபாத்’ என்ற ராணுவத்தில் ஆள் சேர்க்கும் புதிய திட்டத்தை அறிமுகப் படுத்தினார். அக்னிபாத் திட்டத்தின் கீழ் 46 ஆயிரம் வீரர்கள் நடப்பாண்டில் தேர்வு செய்யப்படுவர்.

17 வயது முடிந்து 6 மாதம் ஆனவர்கள் முதல் 21 வயதுக்குட்பட்ட வர்கள் முப்படைகளில் ஒப்பந்த அடிப்படையில் 4 ஆண்டுக்கு சேர்க்கப்படுவார்கள். அதன் பின்னர் பெரும்பாலானவர்களுக்கு கட்டாயம் ஓய்வு அளிக்கப்படும்.

அவர்களுக்கு பணிக்கொடை, ஓய்வூதிய பலன்கள் எதுவும் கிடைக்காது. முந்தைய திட்டத்தின்படி குறைந்தபட்சம் 15 ஆண்டு காலம் பணிபுரியலாம் என்ற நிலையில் புதிய ஆள் சேர்ப்பு நடைமுறையில் 4 ஆண்டுகால பணி காலம் குறைக்கப்பட்டது இளைஞர்கள் இடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியது. ராகுல்காந்தி, பிரியங்கா உள்ளிட்ட அரசியல் தலைவர்களும் ‘அக்னிபாத்’ திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

இந்நிலையில், அக்னிபாத் திட்டம் நாட்டின் பாதுகாப்பை கேள்விக்குள்ளாக்கும் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் விமர்சனம் செய்துள்ளார்.