டெல்லி: அக்னிபாத் திட்டத்தின் மூலம் ராணுவத்தில் சேரும் இளைஞர்களுக்கான வயது வரம்பு 23ஆக உயர்த்தப்பட்டுள்ளது. நாடு முழுவதும் இளைஞர்களின் போராட்டம் நடைபெற்றத்தை தொடர்ந்து, மத்தியஅரசு வயது வரம்பை உயர்த்தி உள்ளது.

இந்தியாவின் முப்படைகளை  பலப்படுத்தும் நோக்கில் மத்தியஅரசு அக்னிபாத் என்ற பெயரில் இளைஞர்களுக்கு ராணுவ பயிற்சி அளிக்கும் திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது.  , முப்படைகளில் இளம் வீரர்களை அதிகளவில் சேர்ப்பதற்கான புதிய ‘அக்னிபாத்’ என்ற முறையில் தற்காலிக முறையில் ஆட்சேர்ப்பு திட்டத்தை அமல்படுத்தியது. இதற்கு வயது வரம்பு 17 முதல் 11 வரை நிர்ணயிக்கப்பட்டிருந்தது. மேலும்,  தேர்வு செய்யப்படும் இளைஞர்கள் 4 ஆண்டுகள் மட்டுமே பணியில் இருப்பார்கள். 4 ஆண்டு கால சேவை முடிந்த பின் அக்னி வீரர்களில் 25 சதவீதம் பேர் ராணுவத்தில் நிரந்தரமாக 15 ஆண்டு ஒப்பந்தத்தில் சேர அனுமதிக்கப்படுவார்கள். மீதமுள்ள 75 சதவீதம் பேர் பென்ஷன் இல்லாமல் பணியில் இருந்து கட்டாய ஓய்வு அளிக்கப்படுவார்கள். இத்திட்டத்தில் 4 ஆண்டு கால குறுகிய சேவை நிறைவு செய்தவர்களுக்கு அரசு வேலைவாய்ப்பில் முன்னுரிமை தரப்படும் என அறிவிக்கப்பட்டது.

அக்னிபாத் திட்டம் நாட்டின் பாதுகாப்பு எதிரானதும் என்றும், இளைஞர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகும் என்று  பல மாநிலங்களில் போராட்டம் சூடுபிடித்துள்ளது. ராணுவ வேலைக்காக காத்திருக்கும் இளைஞர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் குதித்து உள்ளனர். பீகாரில் பாபுவா மற்றும் சாப்ரா ரயில் நிலையங்களில் 3 ரயில்களுக்கு இளைஞர்கள் தீ வைத்தனர். அரியானாவில் இளைஞர்கள் மீது போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தினர்.வருவதால், இத்திட்டத்தை ஒன்றிய அரசு கைவிட வேண்டும் என்று பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்த நிலையில் அக்னிபாத் திட்டத்தின் கீழ் ராணுவத்தில் சேர்க்கப்படுவதற்கான வயது வரம்பு 23ஆக உயர்த்தி மத்தியஅரசு அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. ஆனால், இந்த வயது உயர்வு, நடப்பாண்டு (2022ம் ஆண்டு)  நியமனத்திற்கு மட்டுமே இந்த வயது வரம்பு பொருந்தும் என்று அறிவிப்பு வெளியிட்டுள்ளது.