புதுடெல்லி:
பெட்ரோல் விலை உயர்வுக்கு மத்திய அரசே காரணம் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

பெட்ரோல், டீசல் விலை வரலாறு காணாத புதிய உச்சத்தைத் தொட்டு இருக்கிறது. டீசல் விலையைப் பொறுத்தவரையில், தமிழகத்தில் சென்னையைத் தவிரப் பிற பகுதிகளில் ஏற்கனவே ஒரு லிட்டர் ரூ.100-ஐ கடந்து விற்பனை செய்யப்பட்டு வந்தது. பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்க மத்திய-மாநில அரசு உடனடி நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று அரசியல் கட்சிகள் உள்படப் பல தரப்பினரும் கோரிக்கைகள் விடுத்து வருகின்றனர்.

இந்நிலையில், பெட்ரோல் விலை உயர்வுக்கு மத்திய அரசே காரணம் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், பெட்ரோல் விலை உயர்வு மூலம் வரிக்கொள்ளை நடைபெறுகிறது. தேர்தல் எங்காவது நடைபெற்றால் விலையேற்றத்திலிருந்து மக்களுக்குச் சற்று விடுதலை கிடைக்கும்” எனப் பதிவிட்டுள்ளார்.