தமிழ்நாட்டில் கொரோனாவுக்கு  பலியான டாக்டர்கள் எண்ணிக்கையில் குழப்பம்..

தமிழகத்தில் கொரோனா தொற்றுக்கு உயிர் இழந்த டாக்டர்கள் எண்ணிக்கையில் குழப்பம் ஏற்பட்டுள்ளது.

அகில இந்திய டாக்டர்கள் சங்கத்தின் டெல்லி மேலிடம், நாடு முழுவதும் கொரோனாவுக்கு பலியான டாக்டர்கள் குறித்து ஓர் அறிக்கை வெளியிட்டுள்ளது.

‘’அதில் தமிழகத்தில் கொரோனா தொற்றுக்கு 43 டாக்டர்கள் உயிர் இழந்துள்ளனர். நாட்டிலேயே கொரோனாவுக்கு தமிழ்நாட்டில் தான் அதிக  டாக்டர்கள் இறந்துள்ளனர்’’ எனத் தெரிவித்துள்ளது.

இந்த தகவல் சமூக வலைத்தளங்களில் பரவி வைரலாகி வருகிறது.

ஆனால், இந்த புள்ளி விவரத்தைத் தமிழக டாக்டர்கள் சங்கம் மறுத்துள்ளது.

‘’தமிழகத்தில் கொரோனாவுக்கு 2 அரசாங்க டாக்டர்கள் உள்ளிட்ட 22 டாக்டர்கள் மட்டுமே இறந்துள்ளனர்’’ என இந்திய டாக்டர்கள் சங்கத்தின் தமிழக தலைவர் சி.என். ராஜா தெரிவித்துள்ளார்.

‘’தமிழகத்தில் கொரோனாவுக்கு 43 டாக்டர்கள் பலியாகி விட்டதாக அகில இந்திய டாக்டர்கள் சங்கம் வெளியிட்டுள்ள தகவல் தவறானது.’’ என்றும் ராஜா கூறியுள்ளார்.

-பா.பாரதி.