சென்னை:
மிழகத்தில் நேற்று ஒரே நாளில் ரூ.426 கோடிக்கு மதுவிற்பனையாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த தமிழகம் முழுவதும் நாளை (திங்கட்கிழமை) முதல் வருகிற 24-ந் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதையொட்டி பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளது. அத்தியாவசிய பொருட்களான மளிகை கடைகள், பால் விற்பனை நிலையங்கள், மருந்து கடைகள் மற்றும் ரேஷன் கடைகள் திறக்க நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. முழு ஊரடங்கு காலத்தில் டாஸ்மாக் கடைகள் அடைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனை அறிந்த மது பிரியர்கள் நேற்று காலை முதலே அந்தந்த பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைகளுக்கு சென்று தங்களுக்கு தேவையான மதுபாட்டில்களை வாங்கி சென்றனர்.

இந்நிலையில், தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் ரூ.426 கோடிக்கு மதுவிற்பனையாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.