புதுடெல்லி:
பொது மக்களுக்குத் தீங்கு விளைவிக்கும் எனக் கருதப்படும் 14 வகை கலப்பு மருந்துகளுக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது.

காய்ச்சல் இருமல் போன்றவற்றுக்குப் பயன்படுத்தும் Chlopheniramine Maleate , Codeine syrup உள்ளிட்ட சில கலப்பு மருந்துகளுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளன.

இது தொடர்பாக மத்திய சுகாதார அமைச்சகம் நிபுணர்களின் பரிந்துரையை ஏற்று வெளியிட்டிருக்கும் அறிவிக்கையில் தடை செய்யப்படும் கலப்பு மருந்துகளின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.