டிகர் சிம்பு, த்ரிஷா மீது தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

தமிழ் சினிமா ரசிகர்களின் ரசிக்கத்தக்க ஜோடிகளில் ஒன்று சிம்பு – த்ரிஷா. இவர்கள் இணைந்து நடித்த விண்ணைத்தாண்டி வருவாயா திரைப்படம் பெரும் வெற்றி பெற்றது. அந்தப்படத்தல் இவர்கள் நடிப்பை ரசிகர்கள் பெரிதும் ரசித்தனர்.

இந்நிலையில் சிம்புவால் தான் பாதிக்கப்பட்டுள்ளதாக ஏ.ஏ.ஏ. படத்தின் தயாரிப்பாளர், தயாரிப்பாளர் சங்கத்தில் புகார்  அளித்துள்ளார். கால்ஷீட் சரிவர தரவில்லை.. கொடுத்த கால்ஷீட் நாட்களிலும் சரவர படப்பிடிப்புக்கு வரவில்லை என்று அவர் தெரிவித்துள்ளார்.

இதே போல, ‘சாமி-2’ படத்திலிருந்து நடிகை த்ரிஷா திடிரென  விலகியதால் தனக்கு இக்கட்டான சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக அப்படத்தின் தயாரிப்பாளரும், சங்கத்தில் புகார் அளித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இதையடத்து  சிம்பு, த்ரிஷா இருவரின் மீது தயாரிப்பாளர் சங்கம் நடவடிக்கை எடுக்கும் என்றும்,  இருவரும் நடிக்க முடியாதபடி ரெட் கார்டு போடப்படலாம் என்றும் கூறப்படுகிறது.