சென்னை:
என்எல்சி பணிகளின் போது சேதமான பயிர்களுக்கு இழப்பீடாக ஏக்கருக்கு 40 ஆயிரம் ரூபாய் வழங்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேலும் அந்த உத்தரவில், என்எல்சி-க்காக கையகப்படுத்தப்பட்ட நிலத்தில் சேதப்படுத்தப்பட்ட பயிருக்கு ஏக்கருக்கு ரூ.40,000 இழப்பீடு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது என்றும், ஆகஸ்ட் 6ம் தேதிக்குள் தமிழக அரசு இழப்பீடு வழங்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், செப்டம்பர் 15க்கு பின் நில உரிமையாளர்கள் மேற்கொண்டு விவசாய பணிகளை மேற்கொள்ள கூடாது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.