பர்மிங்ஹாம்:
காமன்வெல்த் ஸ்குவாஷ் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் சவுரவ் கோஷல் வெண்கலம் வென்றார்.

காமன்வெல்த் போட்டியில் பெண்களுக்கான ஜூடோ 78 கிலோ பிரிவில் இந்தியா வீராங்கனை வெள்ளிப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.

தேஜஸ்வின் சங்கர் உயர தாண்டுதலில் வெண்கல பதக்கத்தை வென்றார். பளு தூக்கும் போட்டியில் இந்திய வீரர்கள் குர்தீப் சிங் மற்றும் லவ்பிரீத் சிங் இருவரும் வெண்கல பதக்கங்களை வென்றனர்.

நேற்று நடந்த காமன்வெல்த் விளையாட்டு போட்டிகளில் இந்திய வீரர்கள் மேலும் 5 பதங்கங்களை வென்றதால், இது வரை இந்தியா வென்ற பதக்கங்களின் எண்ணிக்கை 18 ஆக உயர்ந்துள்ளது.