சென்னை

ன்று முதல் வணிக பயன்பாட்டு சமையல் எரிவாயு சிலிண்டர் விலை அதிகரித்துள்ளது.

எண்ணெய் நிறுவனங்களுக்கு பெட்ரோல், டீசல் விலையைச் சர்வதேசச் சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கேற்ப நிர்ணையித்துக் கொள்ள மத்திய அரசு அனுமதி கொடுத்துள்ளது. அதைப்போலச் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையை எண்ணெய் நிறுவனங்களே நிர்ணயித்துக் கொள்கின்றன.

இந்த விலை ஒவ்வொரு மாதமும் சர்வதேசச் சந்தை நிலவரத்திற்கு ஏற்ப நிர்ணயம் செய்யப்படுகிறது.  இன்று எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி வணிக பயன்பாட்டு சிலிண்டரின் விலை அதிகரித்து உள்ளது.

அதாவது ரூ.1937-க்கு விற்ற வணிக சிலிண்டர், இம்மாதம் 8 ரூபாய் விலை அதிகரித்து ரூ.1945-க்கு விற்பனை செய்யப்படுகிறது.  கடந்த இரண்டு மாதங்களாக வணிக பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலை குறைந்த நிலையில், இந்த மாதம் சற்று அதிகரித்துள்ளது.

ஆனால் வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர் விலையில் எந்த மாற்றமும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.