டில்லி

நாளை மறுநாள் காவிரி நீர் ஒழுங்காற்று குழுக் கூட்டம் கூட உள்ளது.

உச்சநீதிமன்றத்தின் உத்தரவின் பேரில், காவிரி நதி நீரைச் சம்பந்தப்பட்ட மாநிலங்கள் பகிர்ந்துகொள்வதற்காகக் காவிரி மேலாண்மை ஆணையத்தையும், ஒழுங்காற்று குழுவையும் மத்திய அரசு அமைத்தது. இவ்விரு அமைப்புகளுக்கும் தமிழகம், கர்நாடகா, கேரளா, புதுச்சேரி ஆகிய 4 மாநிலங்களும் தங்கள் பிரதிநிதிகளை நியமித்து உள்ளன.

நாளை மறுநாள் 90-வது காவிரி நீர் ஒழுங்காற்று குழுக் கூட்டம் நடைபெறவுள்ளது. இந்த கூட்டம் காணொலி வாயிலாக நடைபெறுகிறது. கூட்டத்திற்கு, தமிழகம், கர்நாடகா, கேரளா மற்றும் புதுச்சேரி மாநிலங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே கடந்த 3 ஆம் தேதி இந்த கூட்டம் நடைபெற்ற போது. 23 ஆம் தேதி வரை தமிழகத்திற்கு வினாடிக்கு 2,600 கன அடி வீதம் தண்ணீர் திறக்க கர்நாடக அரசுக்கு உத்தரவிடப்பட்டது.  வரும் 23 ம் தேதி நடக்கும் கூட்டத்தில் ஆணையத்தின் உத்தரவு படி கர்நாடக மாநிலம் தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறந்துள்ளதா? என்பது பற்றி கணக்கீடு செய்யப்படவுள்ளது.