இஸ்லாமாபாத்: இம்ரான்கான் தலைமையிலான பாகிஸ்தான் அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்புக்கு முன்னதாகவே,  இம்ரான்கான் அரசுக்கு கொடுத்து வந்த ஆதரவை கூட்டணி கட்சி வாபஸ் பெற்றுள்ளதால், இம்ரான்கான் அரசு பெரும்பான்மை இழந்துள்ளது. இதையடுத்து அங்கு அரசியல் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

பாகிஸ்தான் அதிபர் இம்ரான்கான் மீது எதிர்க்கட்சியினர் ஏராளமான குற்றச்சாட்டுக்களை சுமத்தி உள்ளனர். இதைத்தொடர்ந்து, அவரது அரசு மீது எதிர்க்கட்சியினர்  நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தனர். இதற்கிடையில், எதிர்க்கட்சிகளுக்கு தனது பலத்தை காட்டும் விதமாக கடந்த 27-ந்தேி தலைநகர் இஸ்லாமாபாத்தில் பிரதமர் இம்ரான்கான் பிரமாண்ட பேரணியை நடத்தினார். பேரணியில் பேசிய இம்ரான்கான் எதிர்க்கட்சிகளை கடுமையாக விமர்சனம் செய்தார். அதற்கு பதிலடியாக எதிர்க்கட்சிகளும் பேரணி நடத்தின.

இந்த பரபரப்பான சூழலில், இம்ரான்கான் அரசுக்கு அளத்து வந்த ஆதரவை கூட்டணி கட்சியான  எம்.கி.எம் கட்சி  விலக்கி கொண்டுள்ளது. இதன் காரணமாக இம்ரான்கான் அரசு பெரும்பான்மையை இழந்துள்ளது.

எம்.கி.எம் கட்சி, இம்ரான்கான் அரசுக்கு கொடுத்துவந்த ஆதரவு விலக்கிக்கொண்டு, எதிர்க்கட்சி கூட்டணியில் சேர்ந்துள்ளதால், எதிர்க்கட்சி களின் மொத்த உறுப்பினர்கள் எண்ணிக்கை  177 ஆக உயர்ந்துள்ளது.  அதே வேளையில் இம்ரான்கான் அரசின் பலம் 164 குறைந்துள்ளது.

இம்ரான்கானின் அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு ஏப்ரல் 3ந்தேதி நடைபெறும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், அதற்கு முன்பே இம்ரான் கான் அரசு பெரும்பான்மை இழந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.  இம்ரான்கான் அரசு பெரும்பான்மையை இழந்துள்ளதால் இம்ரான்கான் தனது பிரதமர் பதவியை ராஜினமா செய்வார் என்று கூறப்படுகிறது.