சென்னை: தமிழ்நாட்டில், 15 மாவட்ட  கூட்டுறவு சார் பதிவாளர்கள்-துணைப் பதிவாளர்களாக நியமனம் செய்து தமிழகஅரசு உத்தரவிட்டு உள்ளது.

இதுகுறித்து கூட்டுறவு உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை முதன்மைச் செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அரசாணையில், தமிழகத்தில் 15 கூட்டுறவு சார் பதிவாளர்களை கூட்டுறவு சங்கங்களின் துணைப் பதிவாளர்களாக பணியமர்த்தம் செய்ய ஆணையிடப்படுகிறது.

1. திருநாவுக்கரசு-திருச்சி பொது விநியோக திட்ட துணைப் பதிவாளர்.

2. சுரேஷ்-கள்ளக்குறிச்சி பொது விநியோக திட்ட துணைப் பதிவாளர்.

3. பழனி-லால்குடி சரக கூட்டுறவு சங்கங்களின் துணைப் பதிவாளர்.

4. சிவமணி-ராணிப்பேட்டை பொது விநியோக திட்ட துணைப் பதிவாளர்.

5. மணிமேகலை-திருக்கோவிலூர் கூட்டுறவு நகர வங்கி மேலாண்மை இயக்குனர்-துணைப் பதிவாளர்.

6. வசந்தி-திண்டுக்கல் கூட்டுறவு நகர வங்கி மேலாண்மை இயக்குனர்-துணைப் பதிவாளர்.

7. சற்குணன்-செங்கல்பட்டு பொது விநியோக திட்ட துணைப் பதிவாளர்.

8. இந்திரா-திருசெங்கோடு சரக கூட்டுறவு சங்கங்களின் துணைப் பதிவாளர்.

9. ருஷ்யாராணி-சென்னை பூங்கா நகர் பொது விநியோக திட்ட துணைப் பதிவாளர்.

10. மீர் ஹசன் முசபர் இம்தியாஸ்-நீலகிரி துணைப் பதிவாளர்.

11. விஜயலட்சுமி-ஜார்ஜ் டவுன் கூட்டுறவு வங்கி மேலாண்மை இயக்குனர், துணைப் பதிவாளர்.

12. சவுந்திரராஜன்-கூட்டுறவு சங்கங்களின் துணைப் பதிவாளர் கோபி செட்டிபாளையம் சரகம்.

13. சக்தி முத்துக்குமார்-வடசென்னை நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டக சாலை மேலாண்மை இயக்குனர், துணைப் பதிவாளர்.

14. அப்துல் மஜீத்-தஞ்சை கூட்டுறவு சங்கங்களின் துணைப் பதிவாளர்.

15. ப.அண்ணாமலை-மயிலாடுதுறை பொது விநியோக திட்ட துணைப் பதிவாளர்.