திருச்சி

முதல்வர் மு க ஸ்டாலின் பிரதமர் மோடியிடம் வெள்ள நிவாரண நிதியை உடனடியாக வழங்க நேரில் வலியுறுத்தி உள்ளார்.

இன்று திருச்சியில் ரூ.1,112 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள விமான நிலையத்தின் புதிய முனையத்தைப் பிரதமர் மோடி திறந்து வைத்தார். மத்திய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா, மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், ஆளுநர் ஆர்.என்.ரவி, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பலர் இந்நிகழ்வில் பங்கேற்றனர்.

முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது உரையில்,

”தொட்ட துறை அனைத்திலும் சிகரத்தைத் தொட்ட மாநிலம் தமிழ்நாடு தான். திருச்சி விமான நிலையத்தின் இரண்டாவது முனையத்தைத் திறந்து வைத்த பிரதமர் மோடிக்கு நன்றி. மதுரை விமான நிலையத்தைப் பன்னாட்டு விமான நிலையமாக மாற்ற வேண்டும்.சென்னை-பினாங், சென்னை-டோக்கியோ இடையே நேரடி விமானச் சேவையைத் தொடங்க வேண்டும். 

சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் 2-ம் கட்ட பணிகளுக்கு மத்திய அரசின் பங்குப் பகிர்வு நிதியை உடனடியாக வழங்க வேண்டும். கல்வி, மருத்துவம் உள்ளிட்ட அவசியத் தேவைகளைச் செய்துதரும் முக்கிய கடமை மாநில அரசுக்குத்தான் உள்ளது. 

சென்னை, தென் மாவட்ட வெள்ள பாதிப்புகளை இயற்கை பேரிடராக அறிவித்து, தேசிய பேரிடர் நிவாரண நிதியை உடனடியாக விடுவிக்க வேண்டும். தமிழக அரசின் கோரிக்கை என்பது அரசியல் முழக்கம் அல்ல; மக்களுக்கான முழக்கம்.” 

என்று கூறி உள்ளார்.