மும்பை

ன்று மும்பையில் நடைபெறும் இந்தியா கூட்டணி பொதுக் கூட்டத்தில் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் பங்கேற்கிறார்.

கடந்த 2022 ஆம் ஆண்டு செப்டம்பரில் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி ‘பாரத ஒற்றுமை யாத்திரை’யை கன்னியாகுமரியில் தொடங்கி, 2023-ம் ஆண்டு ஜனவரியில் ஸ்ரீநகரில் நிறைவு செய்தார். அவர் சுமார் 4 ஆயிரம் கி.மீ. தூரம் நடந்தே இந்த யாத்திரையை மேற்கொண்டு இருந்தார் .

மீண்டும் ‘பாரத ஒற்றுமை நீதி யாத்திரை’ என்ற பெயரில் 2-வது கட்ட யாத்திரையைக் கடந்த ஜனவரி 14-ந்தேதி மணிப்பூரில் இருந்து மும்பையை நோக்கித் தொடங்கினார். அவர் பெரும்பாலும் திறந்தவெளி வாகனத்தில் அமர்ந்தபடி சென்று மக்களைச் சந்தித்தார். இத யாத்திரையி நிறைவு நாளான நேற்று தானே நகர் வழியாக யாத்திரை மும்பை வந்தடைந்தது.

அவரை மும்பையில் வழிநெடுகிலும் மக்கள் அவரை வரவேற்றனர். இந்த யாத்திரையில் ராகுல்காந்தியுடன் பிரியங்கா காந்தியும் கலந்துகொண்டார்.  ராகுல் தமிழர்கள் அதிகம் வசிக்கும் தாராவியில் வாகனத்தில் அமர்ந்தபடி பொதுமக்கள் மத்தியில் பேசிய  பின்னர் அங்கிருந்து புறப்பட்டு திறந்தவெளி வாகனத்தில் ஊர்வலமாகச் சென்ற ராகுல்காந்தி இரவு 8 மணியளவில் சட்டமேதை அம்பேத்கர் சமாதியான சைத்யபூமியில், அம்பேத்கர் உருவ சிலைக்கு மரியாதை செலுத்தி யாத்திரையை நிறைவு செய்தார்

இன்று  காலையில் ராகுல்காந்தி மும்பையில் ‘நியாய சங்கல்ப் பாதயாத்ரா’ என்ற பெயரில் மணி பவன் முதல் ஆகஸ்டு கிராந்தி மைதானம் வரை நடைபயணம் செய்ய உள்ளார்.  மாலை 5 மணி அளவில் மும்பை சிவாஜிபார்க் மைதானத்தில் ராகுல்காந்தியின் யாத்திரை நிறைவு விழா பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது.

கூட்டத்தில் ‘இந்தியா’ கூட்டணி கட்சி தலைவர்களான தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ், ராஷ்டிரீய ஜனதாதளம் தலைவர் தேஜஸ்வி யாதவ், தேசிய மாநாட்டு கட்சி தலைவர் பரூக் அப்துல்லா, ஜார்கண்ட் முதல்-அமைச்சர் சம்பாய் சோரன, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, உத்தவ் பாலாசாகேப் தாக்கரே சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே, தேசியவாத காங்கிரஸ்-சரத்சந்திரபவார் கட்சி தலைவர் சரத்பவார் உள்ளிட்டோர் கலந்து கொள்கிறார்கள்