சிம்லா

மிழகம், கர்நாடகாவைத் தொடர்ந்து இமாச்சலப்பிரதேச மாநிலத்திலும் பஞ்சு மிட்டாய்க்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் விற்கப்பட்ட பஞ்சு மிட்டாயை கடந்த மாதம் அரசு அதிகாரிகள் ஆய்வு செய்ததில் உடலுக்கு கேடு விளைவிக்கக் கூடிய நச்சுப்பொருட்கள் கலந்திருப்பது பரிசோதனையில் தெரிய வந்தது. எனவே தமிழகம் முழுவதும் பஞ்சு மிட்டாய் தயாரிப்பு, விற்பனைக்குத் தடை விதிக்கப்பட்டது.

இதைப் போல் கடந்த சில நாட்களுக்கு முன்பு கர்நாடகத்தில் பஞ்சு மிட்டாய், கோபி மஞ்சுரியன் ஆகிய உணவுப் பொருட்களுக்கு அந்த மாநில அரசு தடைவிதித்தது.  தற்போது இமாசல பிரதேசத்திலும் தற்போது பஞ்சு மிட்டாய் விற்பனைக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

மாநிலத்தில் உள்ள பஞ்சு மிட்டாய் கடைகளில் சுகாதாரத்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில் உண்ணத்தகாத வேதிப்பொருட்கள் கலந்திருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.  எனவே அங்கு பஞ்சு மிட்டாய் தயாரிப்பு, விற்பனைக்கு ஒரு ஆண்டு தடைவிதித்து உத்தரவிடப்பட்டுள்ளது.