சென்னை

கிராமங்களில் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தால் பணப்புழக்கம் அதிகரித்துள்ளதாக முதல்வர் மு க ஸ்டாலின் கூறியுள்ளார்.

இன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னை தலைமைச் செயலகத்தில் மாநில திட்டக்குழுக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் துணைத் தலைவர் ஜெயரஞ்சன், குழு உறுப்பினர்கள், அமைச்சர்கள், அதிகாரிகள் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில் காலை சிற்றுண்டி திட்டம், கலைஞர் மகளிர் உரிமைத்தொகை உள்ளிட்ட திட்டங்கள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டுள்ளது..

முதல்வர் மு.க.ஸ்டாலின் இந்த கூட்டத்தில்

”திட்டக்குழு அரசை அறிவுறுத்தக்கூடிய அமைப்பாக உள்ளது. மக்களுக்கும், அரசுக்கும் இடைவெளி ஏற்படாமல் மாநில திட்டக்குழு செயல்படுகிறது. திட்டக்குழு விடியல் பயணம், காலை உணவுத் திட்டத்தின் தாக்கம் பற்றி திட்டக்குழு அறிக்கை வழங்கியது பயனளித்தது. மேலும் நான் முதல்வன் திட்டத்தின் தாக்கம் குறித்தும் ஆராய்ந்து திட்டக் குழு அறிக்கை அளிக்க வேண்டும்.

13 லட்சம் மாணவர்களுக்கு நான் முதல்வன் திட்டம் மூலம் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டம் மூலம் மாணவர்கள் திறன் மிகுந்தவர்களாக உருவாகி வருகின்றனர். மேலும் திட்டத்தைச் செழுமைப்படுத்த ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. மகளிருக்கு விடியல் பயணத் திட்டம் மூலம் \மாதம் ரூ.1000 சேமிப்பு கிடைக்கிறது.

அரசின் மகளிர் உரிமை தொகை பெற்ற பயனாளிகள் மகிழ்ச்சி தெரிவித்து வருகின்றனர். கிராமங்களில் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் மூலம் கிராமங்களில் பணப்புழக்கம் அதிகரித்துள்ளது. பெண்களுக்கு உரிமைத் தொகை திட்டத்தின் மூலம் பொருளாதார சுதந்திரம் கிடைத்துள்ளது.”

என்று கூறி உள்ளார்.