சென்னை

ர்நாடக அரசு மேகதாது அணை கட்டக்கூடாது என்பதில் தமிழக அரசு உறுதியாக உள்ளதாக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

கர்நாடக மாநிலத்தில் முதல்வர் சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் அரசு பொறுப்பேற்ற பிறகு அம்மாநில துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் முதன்முறையாகப் பெங்களூருவில் நீர்வளத்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.  ஆலோசனையில் நீண்டகாலமாக நிலுவையில் உள்ள மேகதாது அணை திட்டத்துக்கு அனுமதி பெறுவதற்கு விரைவில் டெல்லி சென்று மத்திய அமைச்சர்களைச் சந்தித்துப் பேசவிருப்பதாகக் கூறியுள்ளார். மேகதாதுவில் அணை கட்டுவது கர்நாடகத்தின் உரிமை என்று அவர் தெரிவித்துள்ளார்.

இந்த நடவடிக்கை, காவிரி டெல்டா விவசாயிகளிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. மத்திய மாநில அரசுகள் உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு மாறாக மேகதாதுவில் அணைக் கட்டும் கர்நாடகத்தின் முயற்சிகளைத் தடுத்து நிறுத்த வேண்டும் என்று அவர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

மேலும் தமிழ்நாட்டின் எதிர்ப்பையும் மீறி மேகதாதுவில் கர்நாடக அரசு அணைக் கட்டினால் அதனை உடைத்தெறிவோம் என்றும் காவிரிப் பாசன விவசாயிகள் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

நேற்று ஜப்பானில் இருந்து சென்னை திரும்பிய தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், காவிரி ஆற்றில் கர்நாடக அரசு மேகதாது அணை கட்டக்கூடாது என்பதில் தமிழ்நாடு அரசு உறுதியாக உள்ளதாகக் கூறி உள்ளார்.