சென்னை

மிழகத்தில் பாஜக நடத்தும் பாதயாத்திரையைப் பாவ யாத்திரை எனத் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.

இன்று தி.மு.க. இளைஞர் அணி மாநில, மாவட்ட, மாநகர அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் அறிமுக கூட்டம் அண்ணா அறிவாலயத்தில் நடந்தது. கூட்டத்திற்கு இளைஞர் அணி மாநிலச் செயலாளர் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமை தாங்கினார். முதல்வர் இந்த கூட்டத்தில் மு.க. ஸ்டாலின் கலந்து கொண்டு பேசினார்.

முதல்வர் மு.க. ஸ்டாலின் ,

“திராவிட மாடல் ஆட்சி கோடிக்கணக்கான மக்களுக்கு நல்வாழ்க்கையை அமைத்துக் கொடுத்துள்ளது. மக்களிடம் இந்த திராவிட மாடலை பரப்புங்கள். நேற்று அமித்ஷா தமிழகத்திற்கு வந்தாரே, புதிய திட்டங்களைத் தொடங்கி வைக்கவா வந்தார்? அவர் பாத யாத்திரை தொடங்கி வைக்க வந்திருக்கிறார்.

தமிழகத்தில் பாஜக நடத்துவது பாத யாத்திரை அல்ல. கடந்த 2002 ல் குஜராத்தில் நடந்த சம்பவத்திற்கும், தற்போது மணிப்பூரில் நடந்து கொண்டு இருப்பதற்கும் மன்னிப்பு கேட்கும் பாவ யாத்திரை. கடந்த 2014-ல் பதவியேற்பு விழாவுக்கு ராஜபக்சேவை அழைத்தவர்களுக்கு இலங்கை பிரச்சினை குறித்துப் பேச உரிமை உள்ளதா?

அமித்ஷா பேசும் போது அமைச்சர் செந்தில் பாலாஜி கைது குறித்துக் குறிப்பிட்டுள்ளார். பல குற்ற வழக்கு உடையவர்கள் மத்திய அமைச்சர்களாக இருக்கிறார்களே, இது குறித்து பிரதமரிடம் அமித்ஷா கேட்பாரா? தங்கள் அரசியல் எதிரிகளைச் சலவை செய்யும் வாஷிங் மிஷினாக அமலாக்கத் துறையை பாஜக பயன்படுத்தி கொண்டிருக்கிறது.

விரைவில் பாஜக ஆட்சி முடிய போகிறது.  பாஜக அரசின் ஆட்டம் எல்லாம் சில மாதங்கள்தான். எனவே இந்தியாவுக்கு விடியல் பிறக்க போகிறது. இந்தியாவைக் காப்பாற்ற I.N.D.I.A.-வுக்கு வாக்களியுங்கள்”

என்று உரையாற்றி உள்ளார்.